13 வயது பாடசாலை சிறுமி தொடர் பாலியல் வன்புணர்வு..! தாயாரும் உடந்தை - யாழில் சம்பவம்

 

 யாழ்ப்பாணம் மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் நவாலி பகுதியில் 13 வயது சிறுமி ஒருவரை 41 வயதுடைய நபர் ஒருவர் தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளார்.

இது தொடர்பில் அப்பகுதி மக்களால் மானிப்பாய் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து 41 வயதுடைய சந்தேகநபரை காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.

குறித்த நபருக்கு சிறுமியின் தாயாருக்கும் தவறான உறவு காணப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த நபர் சிறுமியிடமும் தவறாக நடந்து கொண்டுள்ளார்.

மேலும், குறித்த நபர் சிறுமியிடமும் தவறாக நடந்து கொள்ளவதற்கு தாயாரும் உடந்தையாக இருந்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பிரதேச மக்களால் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டு குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்ட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மருந்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மானிப்பாய் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.