ஜனாதிபதித் தேர்தலின் போது மோசடியான வாக்குகளை அல்லது அதற்கு ஆதரவளிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் சிந்தக குலரத்ன தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் சிந்தக குலரத்னவின் கூற்றுப்படி, தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒரு நபருக்கு 12 மாதங்களுக்கும் மேலான சிறைத்தண்டனை அல்லது 2 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும்.
இந்தக் குற்றச்சாட்டில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவர், 7 ஆண்டுகளுக்கு வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்படாமல் இருக்கவும், தேர்தலில் வாக்களிக்கத் தகுதியற்றவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தில் 2023 இல் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் இந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னெப்போதும் இல்லாத வகையில் பந்தயம் கட்டுவது அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வீடுகள், வாகனங்கள், பணம் உள்ளிட்ட பல கோடி மதிப்பிலான சொத்துக்களை சிலர் தேர்தல் பந்தயமாக வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதுதவிர நெடுஞ்சாலையில் தலையை தொங்கவிட்டு மணிக்கணக்கில் நிற்பது போன்ற செயல்களில் சிலர் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் அதிகமான வர்த்தகர்கள் இருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் ரத்தின வியாபாரிகள் மற்றும் தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பந்தயம் கட்டியவர்கள் வழக்கறிஞர்கள் முன்னிலையில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது