1.8 மில்லியன் பீப்பாய் பெற்றோல் இறக்குமதி!

1.8 மில்லியன் பீப்பாய் பெற்றோலை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.பெப்ரவரி 15 முதல் ஒக்டோபர் 14 ஆம் திகதி வரையான 8 மாதங்களுக்குத் தேவையான குறித்த பெற்றோலை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது,இதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.