நாளை முதல் 03 மணி நேரம் மின்துண்டிப்பு !

நாளை முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 03 மணி நேரம் மின்துண்டிப்பை அமுல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.இதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW போன்ற வலயங்களில் 3 மணி நேரம் மின்துண்டிப்பை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.குறித்த வலயங்களில் பகல் வேளையில் ஒரு மணி 40 நிமிடங்களும், இரவு வேளையில் ஒரு மணி 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படும்.இதேவேளை கொழும்பில் எதிர்வரும் 2 மற்றும் 3ம் திகதிகளில் காலை 6 மணி முதல் 8 மணி வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலயங்கள் மின் துண்டிக்கப்படும்.குறித்த தினங்களில் MNOXYZ ஆகிய வலயங்களில் அதிகாலை 5 மணிமுதல் 8 மணிவரையான காலப்பகுதியில் 3 மணிநேரம் மின் துண்டிக்கப்படும்.