நாட்டில் 03 மணித்தியாலய மின்வெட்டு!

நாட்டில் இன்றும் நாளையும் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.இதுகுறித்து மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அந்த ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.இதன்படி,  A முதல்   W வரையான வலயங்களில் இன்றும் நாளையும் முற்பகல் 9 மணிமுதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.அத்துடன் மாலை 5 மணிமுதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணிநேரமும் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.