வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்ட நபர்களின் பட்டியலை பகிரங்கப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ள அவர்;,
"388 வெசாக் மன்னிப்புகள் ரத்து செய்யப்பட்டன் ஆனால் பட்டியலில் இல்லாத ஒரு மோசடி செய்பவர் வெளிநடப்பு செய்தார். வெளிப்படைத்தன்மையை உறுதியளித்த ஜனாதிபதி, உத்தரவில் கையெழுத்திட்டார், எனவே வெளிப்படைத்தன்மை மற்றும் அமைப்பு மாற்றத்தின் நலனுக்காக, முழு பட்டியலையும் பாராளுமன்றத்தில் வெளியிட்டு செயல்முறையை கண்காணிப்பை உறுதி செய்ய வேண்டும்," என்று எம்.பி. பிரேமதாச கூறினார்.
இதேநேரம் ஜனாதிபதியால் மன்னிப்பு வழங்கப்பட்ட 388 கைதிகளின் அதிகாரப்பூர்வ பட்டியலில் டபிள்யூ.எம். அதுல திலகரத்ன என்ற வங்கியாளரின் பெயர் இல்லை என்றும், நீதிமன்ற ஆவணங்களால் அது ஆதரிக்கப்படவில்லை என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேற்று தெரிவித்தார்.
இதற்கிடையில், நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது, சிறைச்சாலைத் தலைவரை கட்டாய விடுப்பில் அனுப்பவும், முதற்கட்ட விசாரணையைத் தொடங்கவும், கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இதன் விளைவாக, சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் துஷார உப்புல்தெனிய கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு, பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தாரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர், நேற்று (09) இரவு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நாளை (11) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.