சமூக ஊடக தளங்களில் வீட்டிலிருந்துவேலை செய்வதன் மூலம் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றும் செயற்பாடுகள் வேகமாக அதிகரித்து வருவதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களத்தால் நடத்தப்பட்ட சமீபத்திய விசாரணைகளில், பேஸ்புக், வட்ஸ்அப்,டெலிகிராம், ஸ்கைப் மற்றும் வீசட் போன்ற சமூக ஊடக தளங்கள் மூலம் குடிமக்கள் இந்தக் குற்றங்களுக்கு அதிகளவில் பலியாகி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் இதுபோன்ற மோசடிகளைச் செய்வதற்கு இரண்டு முக்கிய முறைகளைப் பயன்படுத்துவதாக குற்றப் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.
முதல் முறை, குறித்த சமூக ஊடக தளங்களில் வீட்டிலிருந்து வேலை செய்வதன் மூலம் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று விளம்பரம் செய்து,பின்னர் ஒரு தொழிலில் முதலீடு செய்ய மக்களை அழைப்பது.
முதல் கட்டமாக,குற்றவாளிகள் இந்த முதலீட்டிற்கு ஒரு சிறிய தொகையை டெபாசிட் செய்யச் சொல்கிறார்கள், பின்னர் அந்த சிறிய தொகைக்கு ஈடாக முதலீடு செய்யப்பட்ட தொகையுடன் ஒரு சாதாரண தொகையைச் சேர்க்கச் சொல்கிறார்கள்.
இதுபோன்ற பல படிகளில், முதலீட்டாளர் அதிகரிக்கும் வருமானத்தைப் பெறுகிறார்.
அங்கு, அவர்கள் இந்த நபர்களின் நம்பிக்கையைப் பெற வேலை செய்கிறார்கள், மேலும் அதிக முதலீட்டு வாய்ப்புகள் இருப்பதாகக் கூறி, அதிக அளவில் பணத்தை முதலீடு செய்ய அறிவுறுத்துகிறார்கள்.
இந்த வழியில், உள்ளூர் வங்கிகளில் உள்ள கணக்குகளில் பணம் டெபாசிட் செய்யப்படுகிறது. அதன்படி, பல சந்தர்ப்பங்களில் அதிக அளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டாலும், முதலீட்டாளர்களுக்கு நன்மைகள் வழங்கப்படுவதில்லை.
இந்த முதலீட்டாளர்கள் சலுகைகளைத் திருப்பித் தராதது தொடர்பாக சமூக ஊடகங்களில் குற்றவாளிகளால் துன்புறுத்தப்படும் போது, சலுகைகளைப் பெற விரும்பினால், பாதுகாப்பு வரிகள் மற்றும் சுங்கக் கட்டணம்போன்ற கட்டணங்களைச் செலுத்த வேண்டும் என்றும், அதற்காக அவர்கள் கூடுதல்பணம் செலவிட்டால், சலுகைகளை வழங்கமுடியும் என்றும் குற்றவாளிகள் அவர்களிடம் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, அதிகபணத்தை முதலீடு செய்ய அவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டாவது முறை, இந்த சமூகஊடக வலைப் பின்னல்களில், வீட்டிலிருந்து வேலை செய்வதன் மூலம் மக்கள் அதிக அளவு பணம் சம்பாதிக்க முடியும் என்று விளம்பரப்படுத்துவதும், அதில் சேருபவர்களின் கணக்கு எண்களைப் பெறுவதும், அந்தக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளபணத்தை, சமூக ஊடக வலைப்பின்னல்கள் மூலம் குற்றவாளிகளால் அறிவிக்கப்பட்ட கணக்குகளுக்கு மாற்றுவதும் ஆகும்.
இதன் பலனாக, கணக்கில் டெபாசிட் செய்யப்படும்பணத்திலிருந்து கணக்கு உரிமையாளர்களுக்கு ஒரு கமிஷன் வழங்கப்படுகிறது.
இந்த முறையின் மூலம், மேலே விவரிக்கப்பட்ட முதல் முறை மூலம் டெபாசிட் செய்யப்பட்ட பணம் அதிக எண்ணிக்கையிலான கணக்குகளைப் பயன்படுத்தி ஏனைய கணக்குகளுக்குச் செலுத்தப்படுவதை விசாரணை அதிகாரிகள் கவனித்துள்ளனர். அதன்படி, இதனால் பாதிக்கப்படுபவர்கள் அறியாமலேயே நிதி மோசடி, பண மோசடி மற்றும் ஒரு குற்றத்திற்கு உதவுதல் மற்றும்ஊக்குவித்தல் போன்றவற்றுக்கு பலியாவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் விசாரணைகளில், இந்தக் குற்றங்களைச் செய்யும் குற்றவாளிகள், இந்த நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி, நவீன தொழில்நுட்பத்தையும் இணையத்தையும் பயன்படுத்துகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
பேஸ்புக், வட்ஸ்அப், டெலிகிராம்,ஸ்கைப், வி செட் போன்ற சமூக ஊடக வலையமைப்புகள் மூலம் செய்யப்படும் குற்றங்கள் குறித்த தகவல்களை புலனாய்வாளர்களால் உடனடியாகப் பெற முடியாததால்,இந்தக் குற்றவாளிகள் குற்றங்களைச் செய்துசட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே,இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க இலங்கைமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுஒரு முக்கிய தேவை என்பதை விசாரணை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதாகவும்மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.