இயந்திர துப்பாக்கிகளுடனும் யுத்த விமானத்துடனும் படையினர் தயார் நிலையில்: மீண்டும் கொதி நிலையில் தென்னிலங்கை

 இயந்திர துப்பாக்கிகள் பொருத்தப்பட்டு யுத்த விமானங்கள் போராட்டம் இடம் பெறும் பகுதியைக் சுற்றி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

கொழும்பு - பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தின் பிரதான நுழைவாயில் கதவினை உடைக்கும் முயற்சியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் கொழும்பின் சகல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கில் மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளதால் பதற்றம் நிலவி வருகின்றது.

இந்த நிலையில் அப்பகுதியில் உலங்குவானூர்திகள் வட்டமிட்டு வருவதுடன், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, ஆயுதம் ஏந்திய படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.