எதிர்வரும் எந்த தேர்தல்களாக இருந்தாலும் மொட்டுக் கட்சிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்!


பொதுஜன பெரமுனவுக்கு சரியான பாடத்தை புகட்ட வேண்டும் என முன்னாள் அதிபர் உறுதியாகத் தெரிவித்துள்ளார் எனத் தகவல் வெயளியாகியுள்ளது.

அந்த வகையில், எதிர்வருகின்ற தேர்தல்கள் எதுவாக இருந்தாலும் அதில் பொதுஜன பெரமுன கட்சிக்குச் சரியான பாடத்தை மக்கள் புகட்ட வேண்டும் என்று முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வலியுறுத்தல் விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுயாதீனமாகச் செயற்பட்டு வரும் ‘மொட்டு’க் கட்சி எம்.பிக்களான அனுரபிரியதர்சன யாப்பா, சந்திம வீரக்கொடி ஆகிய இருவரும் அண்மையில் முன்னாள் அதிபர் சந்திரிகாவை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினர்.

இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்றும் செய்தி வெளியாகியுள்ளது. இந்தச் சந்திப்பின் போதுசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை சந்திரிகா கடுமையாக விமர்சித்தார் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.