முடிவுக்கு வரும் விஜய் தொலைக்காட்சி சீரியல்!

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சிகள் என்றால் அது சன், விஜய் மற்றும் ஜீ தமிழ் தான். இந்த 3 தொலைக்காட்சிகளின் சீரியல்கள் தான் டாப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.காலை முதல் இரவு வரை தொடர்கள் ஒளிபரப்பாகிக் கொண்டே இருந்தாலும் வாரா வாரம் TRPயில் டாப் 5ல் இருப்பது சன் மற்றும் விஜய் தொடர்கள் தான்.கயல், பாக்கியலட்சுமி, சுந்தரி, ரோஜா, கண்ணான கண்ணே, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற சீரியல்கள் தான் டாப்பில் இருக்கின்றன.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் மதிய வேளையில் ஒளிபரப்பாகும் பாவம் கணேசன் தொடர் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொடருக்கு பதிலாக கண்ணே கலைமாணே என்ற தொடர் வர இருக்கிறதாம்.