செங்கடலில் பற்றியெரியும் இரண்டு கப்பல்கள்

ஏமனின் செங்கடல் பகுதியில் ஏவுகணைகள் தாக்கியதில் இரண்டு கப்பல்கள் தீப்பிடித்து எரிந்ததாக இரண்டு இங்கிலாந்து கடல்சார் முகவரமைப்புகள்(UK maritime agencies )ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.

ஏடனுக்கு தென்கிழக்கே 83 கடல் மைல் தொலைவில் ஆன்டிகுவா மற்றும் பார்புடா(Antigua- and Barbuda) கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் ஒன்று ஏவுகணையால் தாக்கப்பட்டு தீப்பிடித்ததாக பிரிட்டிஷ் பாதுகாப்பு நிறுவனமான ஆம்ப்ரே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.பின்னர் தீ அணைக்கப்பட்டது

முன்னதாக, செங்கடலுக்கு தென்கிழக்கே 80 கடல் மைல் தொலைவில் மற்றுமொரு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த கப்பலின் கப்டனிடம் இருந்து அறிக்கை கிடைத்ததாக ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் பிரிவு (UKMTO) தெரிவித்தது.

"கப்பல் 8.2 நொட்ஸ் வேகத்தில் ஏடன் வளைகுடாவில் தென்மேற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​​முன்னோக்கி ஒரு ஏவுகணையால் தாக்கப்பட்டது. இதில் கப்பலில் தீ பரவ தொடங்கியது ஆனால் அது அணைக்கப்பட்டது," என ஆம்ப்ரே தெரிவித்தது

"இரண்டாவது ஏவுகணை ஏவப்பட்டபோதிலும், கப்பலை தாக்கவில்லை. சம்பவத்தின் போது அருகில் இருந்த சிறிய படகுகளில் இருந்தவர்கள் கப்பலின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்." கப்பலின் போக்கை துறைமுகத்திற்கு மாற்றி, வேகத்தை அதிகரித்ததாகவும், "எந்தவொரு காயமும் ஏற்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டது.