வெடி குண்டுகளை மறைத்து வைத்திருந்த இருவர் யாழில் கைது

யாழ்ப்பாணம், புலோப்பளை பகுதிகளில் வெடிமருந்து பெறும் நோக்கில் குண்டுகளை மறைத்து வைத்திருந்த இருவர், விசேட அதிரடிப்படையினரால், நேற்றுமுன்தினம் (21) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோட்டார் குண்டுகள், ஆர்.பி.ஜி குண்டுகளில் இருந்து வெடிமருந்துகளை சேகரித்து டைனமைட் தயாரிப்பவர்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில் குண்டுகளை மறைத்து வைத்திருந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்

இது தொடர்பில்  மருதங்கேணி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.