வவுனியாவை உலுக்கிய கோரச்சம்பவம் - ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலங்களாக மீட்பு - கொலையா? தற்கொலையா? கழுத்து நெரிக்கப்பட்ட அடையாளம்!

வவுனியா குட்செட் அம்மா பகவான் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.இரண்டு குழுந்தைகள் தாய் மற்றும் தந்தையே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். தந்தை, இரு பிள்ளைகள் மற்றும் மனைவியை கொலை செய்த பின்னர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றைய தினம்  வீட்டின் உரிமையாளருக்கு அவரது நண்பர் ஒருவர் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார். எனினும் அவர் பதிலளிக்கவில்லை. இதனையடுத்து அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.இதன்போது குறித்த வீட்டினுள் குடும்பஸ்தர் அவரது இருபிள்ளைகள், மனைவி ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தமையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

ந்த சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த சிவபாதசுந்தரம் கௌசிகன் வயது 42, வீட்டின் விறாந்தை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன், அவரது மனைவியான கௌ.வரதராயினி வயது 36, இருபிள்ளைகளான கௌ. மைத்ரா வயது9 ,கௌ.கேசரா வயது3 ஆகியோர் உறங்கியபடியும் சடலமாக மீட்கப்பட்டனர்.அவர்களின் கழுத்துக்களில் நெரிக்கப்பட்ட அடையாளங்கள் காணப்படுகின்றன.எனவே அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம். ஆயினும் பிள்ளைகளையும் மனைவியையும் கொன்று விட்டு கணவர் தற்கொலை செய்திருக்கவும் சந்தர்ப்பம் உண்டு எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்