ரஷ்யாவுக்கு ஆளில்லா விமானங்களை கொடுத்து உதவிய விவகாரம்-ஈரானியத் தூதரின் அங்கீகாரம் இரத்து செய்த உக்ரைன்!

ஈரான் ரஷ்யாவுக்கு ஆளில்லா விமானங்களை கொடுத்து உதவியதற்கு பதிலளிக்கும் வகையில், ஈரானியத் தூதரின் அங்கீகாரம் இரத்து செய்யப்படும் என்றும், ஈரானிய தூதரகப் பணியாளர்கள் கீவில் உள்ள ஈரானிய தூதரகப் பணியாளர்கள் குறைக்கப்படுவார்கள் என்றும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.இதுவரை நடந்த மோதலில் மொத்தம் எட்டு ஈரானிய ஆளில்லா விமானங்களை உக்ரைனியப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு நேர காளொணி உரையில் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.

மேலும், ‘ஆறு ஈரானிய ஆளில்லா விமானங்கள் கிழக்கு மற்றும் தெற்கு கட்டளைகளின் எங்கள் வான் பாதுகாப்புகளால் வீழ்த்தப்பட்டன. கடற்படையின் வான் பாதுகாப்பு மூலம் மேலும் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. மற்றொரு தாக்குதல் ஈரானிய ஆளில்லா விமானத்தின் தெற்கு கட்டளையின் வான் பாதுகாப்புப் படைகளால் வீழ்த்தப்பட்டது.இத்தகைய நட்பற்ற செயலுக்கு பதிலளிக்கும் விதமாக, ஈரானின் தூதரின் அங்கீகாரத்தை பறிக்க உக்ரைன் தரப்பு முடிவு செய்துள்ளது, மேலும் தலைநகர் கிவ்வில் உள்ள ஈரானிய தூதரகத்தின் தூதரக ஊழியர்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது’ என கூறினார்.

ரஷ்யாவிற்கு ஆளில்லா விமானங்களை வழங்கியதாக உக்ரைன் மற்றும் அமெரிக்கா கூறும் கூற்றை ஈரான் மறுத்துள்ளது.போரில் இரு தரப்பிற்கும் ஈரான் உதவாது என்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்மானம் எட்டப்பட வேண்டும் எனவும் ஈரானில் உள்ள அதிகாரிகள் கூறியுள்ளனர்.