உலகத்தின் தலைவிதி - இறுதி ஆயுதம் அணு யுத்தமே: புடின் அதிரடி


அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில், உக்ரைன் நாட்டு அதிபர் வோலோமிடிர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்தார்.

அதை எதிர்த்து ரஸ்யா போரை தொடங்கியது. கடந்த பெப்ரவரி மாதம் முதல் உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஸ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதற்கு உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றன. இந்தப் போர் இன்னனும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன.

ரஸ்யா படையெடுப்புக்கு பிறகு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கடந்த டிசம்பர் 21ம் திகதி அமெரிக்கா சென்றார்.

அமெரிக்க அதிபர் ஜோ பிடனைச் சந்தித்து, உக்ரைனுக்கு அதிக ஆயுதம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து உக்ரைனுக்கு 3 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

அதைத் தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ படையில் உக்ரைன் கண்டிப்பாக இணையும் என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

ஆனால் உக்ரைனில் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் நேர்மறையான பலன்களை தருவதாக ரஸ்ய அதிபர் புடின் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து ரஸ்ய படைகள் உருவான 80வது ஆண்டு விழாவில் பங்கேற்ற அதிபர் புடின் கூறும்போது, ‘‘உக்ரைன் போரில் வெற்றி நிச்சயம். துளியும் சந்தேகம் வேண்டாம். ரஷ்ய மக்களின் ஒற்றுமை மற்றும் வேண்டியதில் நிலைத்தல் ஆகிய குணாதிசயங்களால் இந்த வெற்றி சாத்தியமாகும்.

நமது வீரர்களின் சிறப்பான செயல்பாடுகள் அதற்கான பலன்களை கொடுக்கும். உக்ரைனில் உள்ள நியோ நாஜிக்களை அழிப்பதே நமது நோக்கம். ஹிட்லரின் நாஜிப்படைகளின் தற்போதைய வடிவம் தான் நியோ நாஜிக்கள். இன வெறியர்களான அவர்கள் நசுக்கப்பட வேண்டும்.

சர்வாதிகாரி மற்றும் யூத மக்களை கொன்று குவித்து உலகத்தையே ஆட்டிப்படைக்க நினைத்த ஹிட்லரின் நாஜிப்படைகளை நாம் ரஸ்யர்கள் அழித்ததை போல், இந்த நாஜிக்களும் ஒடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன்’’ என அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில் அணு ஆயுத போர் உருவாக வாய்ப்புள்ளதாக ரஸ்ய முன்னாள் அதிபர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் ரஸ்யாவின் ராணுவ நடவடிக்கையை குறிப்பிடும் வகையில், "வழக்கமான போரில் தோல்வி அணு ஆயுதப் போரைத் தூண்டலாம்" என்று ரஷ்ய முன்னாள் அதிபர் மெட்வடேவ் இன்று கூறினார்.

ஒரு வேளை ரஸ்யா தோற்கடிக்கப்பட்டால், அணு ஆயுதப் போர் உருவாக சாத்தியம் உள்ளது.

அதற்கு பின் இந்த உலகத்தின் தலைவிதி எவ்வாறு இருக்கும் என்பது கணிக்க முடியாதது என அவர் தெரிவித்துள்ளார்.