இரண்டாக பிளவடையப்போகும் நாடு ..! சர்ச்சைகளை கிளம்பியுள்ள ரணிலின் உறுதிமொழி

வெகு விரைவில் நாடு இரண்டாக பிளவடையும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தில் உறுதிமொழி வழங்கியிருந்தார்.

ஆனால் இந்த உறுதிமொழி மூலம் நாடு விரைவில் பிளவடைந்துவிடும்.

13ம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் வடக்கின் பிரிவினைவாத, ஜாதி அடிப்படையிலான அரசியல்வாதிகளின் அபிலாஷை நிறைவேறினாலும், வடக்கு மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது என தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஒட்டுமொத்த நாடு எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு மூலோபாய ரீதியான தீர்வுத் திட்டங்கள் எதனையும் இதுவரையில் ரணில் முன்வைக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட சர்வகட்சி கூட்டமொன்றை கூட்டுவதன் மூலம் இனவாத ஓர் அரசியல் கட்சியை திருப்திபடுத்தும் நோக்கிலானது எனவும் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.