காலி முகத்திடலில் பதற்றம்: குவிக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப்படையினர்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

 கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் பெருமளவான காவல்துறையினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் கலகத்தடுப்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோட்டாபய ராஜபக்சவின் பிறந்த தினத்தை கறுப்பு தினமாக அனுஸ்டித்து காலிமுகத்திடல் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்படவுள்ளதாக வந்த எச்சரிக்கையை அடுத்தே குறித்த பாதுகாப்பு ஏற்பாடு இடம்பெற்றுள்ளது.

போராட்டகாரர்கள் அரச தலைவர் செயலகத்தின் ஏனைய இரண்டு நுழைவாயில்களையும் நேற்று நள்ளிரவில் முற்றுகையிட்டிருந்தனர்.

இதன்போது போராட்டக்காரர்கள் நுழைவாயில்களுக்கு முன்பாக கூடாரங்களை அமைத்து விண்ணதிரும் கோஷங்களுடன் தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

மேலும் அப்பகுதியில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், கொழும்பில் உள்ள நிதியமைச்சு மற்றும் அரச தலைவர் அலுவலகங்களின் நுழைவாயில்களை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.