யாழ் தியாகியின் கேவலமான செயல் : விரைவில் கைது செய்யப்படுவாரா..!

 சிறிலங்கா மத்திய வங்கியினால் (Central Bank of Sri Lanka ) வெளியிடப்பட்டுள்ள நாணயத்தாள்களை காலால் மிதித்து சேதப்படுத்தும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த நபர் ஒருவர் தன்னை கோடீஸ்வரராக மக்கள் மத்தியில் வெளிப்படுத்திய நிலையில், தன்னை தியாகி என அவரே அழைத்து வருகின்றார்.

கோடிக்கணக்கான பணத்தை தானமாக வழங்க அவருக்கு பணம் எங்கிருந்து வருகின்றது.

இதன் பின்னணியில் யார் உள்ளார் என்பது பெரும் சார்ச்சையாக மாறியுள்ள நிலையில், சிறிலங்காவில் தமிழர்கள் மத்தியில் தன்மானம் மேலோங்கியுள்ளதுடன், இலவசம் என்ற பேரில் மக்களை சோம்பேறிகளாக மாற்றும் சதித்திட்டத்தின் பின்னணியாக இருக்கலாம் என பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் பெருந்தொகை பணத்தை தனது காலில் போட்டு மிதித்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 சிறிலங்கா மத்திய வங்கியின் சட்டங்களுக்கு அமைய நாணயத்தை சேதப்படுத்துவது பாரிய குற்றமாகும்.

இதனை சட்ட ரீதியாக அணுகினால் தியாகி என அடையாளப்படுத்தப்படும் கோடீஸ்வரர் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.