அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு: ரணிலுடன் முரண்படும் பந்துல

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதிஏற்கனவே மிகவும் சிறமப்பட்டு வழங்கப்படும் அரச ஊழியர்களின் சம்பளத்திற்கு மேலதிக பணத்தை எவ்வாறு சேர்ப்பது என அமைச்சர் பந்துல குணவர்தன கேள்வியெழுப்பியுள்ளார்.

கெஸ்பேவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சம்பளத்தில் மேலதிக பணத்தை எவ்வாறு சேர்ப்பது என்பது குறித்து போராட்டங்களில் ஈடுபடுவோருக்கும் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட பாரிய பொருளாதார வீழ்ச்சியினால் நாடு பல நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும், படிப்படியாக நல்லதொரு நிலை உருவாகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, கடன் மறுசீரமைப்பு முடியும் வரை நாடு மீண்டும் கடன் பெற முடியாது என்றும் யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்தப் பொருளாதாரப் பிரச்சினைக்கு சரியான தீர்வைக் காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, கடந்த ஆண்டு மொத்த வரி வருமானத்தில் 72% அரச சேவைக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்காக செலவிடப்பட்டதாக தெரிவித்த அவர், சமுர்த்தி மற்றும் ஏனைய மானியங்களுக்கு ஐநூறு பில்லியன் செலவிடப்பட்ட போது திறைசேரிக்கு கிடைத்த வரி வருமானத்தில் ஒரு சதம் கூட மீதம் இருக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பதை போராட்டக்காரர்கள் காட்ட வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையில், அரச ஊழியர்களுக்கு முறையான சம்பள அதிகரிப்பு வரவு செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  வாசுதேவ தெரிவித்தார்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்று (30.10.2023) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், நீதிமன்றத்தின் பாதுகாப்பிலுள்ள மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள், உடுப்புக்கள் தவிர்ந்த ஏனைய சான்றாதார பொருட்கள் மேலதிக பகுப்பாய்விற்காக தொல்லியல் மேற்படிப்பு நிறுவனத்திற்கு அனுப்ப நீதிமன்றத்தின் உத்தரவினை பெற விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் எமக்கு இருக்கும் நிதியை கொண்டு அகழ்வு பணியினை நவம்பர் 20 ஆம் திகதி ஆரம்பிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் புதைகுழிக்குள் நீர் தேங்காதவாறு போடப்பட்டுள்ள கொட்டகையானது மேலும் 10 அடிக்கு நீட்டப்பட்டுள்ளது. இரண்டு சீசிரீவி கமரா தொகுதியானது எனது வேண்டுகோளினையடுத்து அண்மையில் அரசாங்க அதிபரினால் பொருத்தப்பட்டுள்ளது.

இம்முறை அகழ்வுபணி நடைபெறும் போது ராடர் என்ற கருவியை பாதுகாப்பு அனுமதியை பெற்று பரீட்சித்து பார்க்க எதிர் பார்த்துள்ளோம்.

இதன் மூலம் எவ்வளவு தூரத்திற்கு குறித்த புதைகுழியானது உள்ளது என அடையாளப்படுத்தி கொள்ள கூடியதாக இருக்கும். நிதியினை மாவட்ட செயலகத்தினை சேர்ந்த பிரதான கணக்காளர் தான் கையாளுகின்றார்.

நீதிமன்ற கூற்றுப்படி 2.5 மில்லியன் வரையிலான நிதி இருப்பதாக தெரிவித்திருந்தார். அவ் நிதி இரண்டு வாரங்களுக்கு அகழ்வுபணி மற்றும் ஏனைய பணிகளை மேற்கொள்ள போதுமானதாக இருக்கும் என மேலும் தெரிவித்தார்.