சீனாவிற்கு சிறிலங்கா வழங்கியுள்ள உறுதி..!


முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடன் உறவுகளை மேம்படுத்த எதிர்பார்த்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

சீன கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வாழ்த்திய முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு இலங்கைக்கான சீனத் தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் சீன மக்கள் கட்சி பொதுஜன பெரமுனவுடன் நட்பு மற்றும் பரிமாற்றங்களை மேலும் மேம்படுத்த விரும்புவதாக சீன தூதரகம் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக ஜீ ஜின்பிங்கின் மறுதேர்தல், சீன மக்களுக்கு அவரது தலைமையின் வலிமை மற்றும் தைரியத்தை உறுதி செய்துள்ளது என்று ராஜபக்ச தெரிவித்திருந்தார்.