சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் உத்தியோகபூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ள பதிவு இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Major Missing எனக் குறிப்பிடப்பட்டுள்ள குறித்த பதிவில் தோனியின் சீருடை மற்றும் தோனி களத்தில் இருப்பது போன்றதொரு புகைப்படங்களும் பதிவேற்றப்பட்டுள்ளன
இந்த நிலையில் மகேந்திரசிங் தோனி ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறவுள்ளாரா? எனக் கேள்வி எழுந்துள்ளதுடன், குறித்த பதிவு இரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
எவ்வாறாயினும் இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.