ரணிலுக்கு வடபகுதி கொடுத்த அடி..! ரணில் முன்னே போட்டுடைத்த சுமந்திரன்


நீண்டகால பிரச்சினையை தீர்க்க நாம் உறுதுணையாக இருப்போம் என அதிபர் முன்னிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அதிபர் செயலகத்தின் வடக்கு அபிவிருத்தி விசேட பிரிவு அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்டு அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “அதிபர் வடக்கு, கிழக்குக்கான இந்தச் செயலணியை திறந்து வைப்பதற்காக வருகைதந்தமைக்காக வடக்கில் இருந்து அவரை நாம் வரவேற்கின்றோம்.

வடக்கு, கிழக்குக்கு விசேடமான ஒரு நிதியை அவர் பிரதமராக இருந்த போது உருவாக்கியிருந்தார். போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மீள் எழுச்சிக்காக அது உருவாதக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கு பிரதேசத்தின் மீள் எழுச்சிக்காக அன்றே கவனம் செலுத்தியிருந்தார். தற்போது அதிபராக மிகவும் முக்கியமான இந்த நடவடிக்கையை முன்னெடுக்கும் போது நாம் வாழ்த்துக் கூறுகின்றோம்.

இந்த விடயத்தில் சேர்ந்து இயங்குவோம் என உறுதியளிக்கிறோம். 2005 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட்ட போது சமஷ்டி தீர்வை முன்வைத்து போட்டியிட்டார்.

அந்த நேரத்தில் வடக்கு மாகாணம் கால்தடம் போட்டு விழ வைத்தது. தற்போது விழ வைத்தவர்களின் ஆதரவுடன் அதிபராக வந்திருக்கின்றார்.

இவ்வாறான நிலையில், நீண்டகால பிரச்சினைக்கு ஒரு ஆக்கபூர்வ முடிவை எடுப்பதாக சொல்லியிருக்கிறார். அதனை தீர்ப்பதற்கு நாம் உறுதுணையாக இருந்து செயற்படுவோம்” - எனத் தெரிவித்தார்.