இடைக்கால கிரிக்கெட் குழு தொடர்பில் ரணில் நிலைப்பாடு


விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவை இடைநிறுத்தியமை மற்றும் இடைக்கால குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று (06) மாலை அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான குழுவொன்று நியமிக்கப்படும் என அதிபர் அறிந்திருக்கவில்லை என உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்விடயம் குறித்து மேலும் அறியத்தருகையில், புதிய இடைக்கால குழுவிற்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பில் அதிபருக்கு அறிவிக்கப்படவில்லை.

இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை தொடர்பு கொண்டு விசாரிக்க அதிபர் ரணில் விக்ரமசிங்க முயற்சித்துள்ளார்.

அது இதுவரை வெற்றியளிக்கவில்லை.” என குறிப்பிடப்பட்டுள்ளது.