தாவடியில் பெட்ரோல் குண்டுத் தாக்குதல் : ஒருதலைக் காதலால் விபரீதம்

யாழ்ப்பாணம் - தாவடிப் பகுதியில்  இன்று (16) அதிகாலை வீடு ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் ஐந்து பேர் காயம் அடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வன்னியசிங்கம் வீதியில் உள்ள குறித்த வீட்டின் மீது  உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவராலேயே தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்ட வீட்டில் உள்ள யுவதியை குறித்த இளைஞன்  காதலித்ததாகவும், பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்குமாறு கூறியபோது பெற்றோர் மறுத்திருந்த நிலையில் குழுவாக வந்து வீட்டினை தாக்கி சேதப்படுத்தியதுடன் வீட்டில் பெட்ரோல் குண்டு தாக்குதலையும் மேற்கொண்டுள்ளார்.

இதனால் வீட்டிலுள்ள பல உடமைகளும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.