கட்சி தாவும் மொட்டு எம்.பிக்கள் - இலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்!

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு, இணையவுள்ள 15 நாடாளுமன்ற உறுப்பினர்களில் நால்வர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் அண்மையில் இரகசிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.

கொழும்பு 7 இல் அமைந்துள்ள இரு தரப்புக்கும் நன்கு பரிச்சயமான ஒருவரின் இல்லத்தில்தான் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கூடிய விரைவில் தேர்தல் ஒன்று இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும், இதற்காக அரசுக்குள் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளதாகவும் குறித்த நால்வரும் சஜித்திடம் கூறியுள்ளனர்.

15 உறுப்பினர்களும் நேராக ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையப் போகிறீர்களா அல்லது கூட்டணியாக இணையப் போகிறீர்களா என அனைவரும் தீர்மானித்து முடிவை அறிவியுங்கள் என அவர்களிடம் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் நடைபெற்ற சந்திப்பு இரவு விருந்துடன் நிறைவு பெற்றுள்ளது.

அடுத்த கலந்துரையாடலுக்கான திகதியும் அன்றைய சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.