எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு காலை நேரத்தில் மின்வெட்டு இல்லை!

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு காலை நேரத்தில் மின் விநியோகம் தடைப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையான காலப்பகுதியில் மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் வாரங்களில் இணைய வழியில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதனை தொடர்ந்தே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.