தாலிகட்டிய சிறிது நேரத்தில் மணமேடையில் அடிதடியில் இறங்கிய புதுமண தம்பதி (காணொளி)


தாலி கட்டிய சில நிமிடங்களிலேயே புதுமண தம்பதிகள் ஒருவரை ஒருவர் தாக்கி அடிதடியில் இறங்கிய சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் அது தொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

டெல்லியில் கடந்த 12ஆம் திகதி திருமணம் ஒன்று நடந்த நிலையில் அந்த திருமணத்தின் போது மணமகளுக்கு மணமகன் வலுக்கட்டாயமாக இனிப்பு ஊட்டியுள்ளார்.

இதனால் எரிச்சலடைந்த மணமகள் மணமகனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத மணமகன், மணமகள் கன்னத்தில் அறைய மணமகள் செருப்பு கழட்டி மணமகனை அடிக்க இருவரும் அடிதடியில் இறங்கினர்.

இதனை உறவினர்கள் தடுத்தும் முடியாமல் அடிதடி தொடர்ந்து கொண்டிருந்தது. இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.