பிரபல கால்பந்து வீரருக்கு கொரோனா

பிரபல வீரரான மெஸ்சிக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து வெளியாகி உள்ள செய்தியில் மெஸ்சி தற்போது பாரீஸ் செயிண்ட் ஜெர்மென் அணிக்கு விளையாடி வருகின்றார். இதன் போது அந்த அணியில் உள்ள ஊழியர் ஒருவருக்கு முதலில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த அணியில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசிசோதனை செய்யப்பட்டதில் லயோனஸ்  மெஸ்சி, ஜு ய்ன் பெர்னட், செர்ஜியோ ரிகோ மற்றும் 19 வயதான நேதன் பிரமாஷாலா ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.