இந்தியாவில் தவறான அறுவை சிகிச்சை அமைச்சர் பந்துல சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதி

போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் போது ஏற்பட்ட தவறு காரணமாக சிங்கப்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை தவறானது என்று அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், எந்த ஒரு தரப்பிலும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இதேவேளை, பந்துல குணவர்தன வசம் இருந்த வெகுஜன ஊடகத்துறை அமைச்சு பதவிக்கு சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.