யாழில் பட்டப்பகலில் வீடுடைத்து திருட்டு..! இருவர் கைது



யாழ். சுழிபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றை பட்டப்பகலில் உடைத்து தங்க நகையைத் திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுழிபுரம் பகுதியில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் நேற்று கடமைக்கு சென்று திரும்பிய போது வீடுடைத்து 8 தங்கப் பவுண் நகை திருடப்பட்டது.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் நேற்று மாலை உரிமையாளர் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த தலைமை காவல்துறை பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் காரைநகரைச் சேர்ந்த இருவரை இன்று கைது செய்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து ஏழரை தங்கப் பவுண் நகை கைப்பற்றப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.