கேரளாவில் கோர விபத்து - பரிதாபமாக உயிரிழந்த 21 சுற்றுலா பயணிகள்


கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் துவல்திரம் கடற்கரையில் நேற்று சுற்றுலா படகொன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச்சென்ற இரண்டு அடுக்கு படகொன்றே கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

உடனடியாக மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் இந்த விபத்தில் கடலில் மூழ்கி 5 குழந்தைகள், பெண்கள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர்.

மேலும், சிலர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அதேவேளை, படகு விபத்தில் மேலும் சில பயணிகள் கடலில் மூழ்கி மாயமான நிலையில் அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.