காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே தற்போது துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் பொலிஸார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் காஷ்மீர் பொலிஸாருடன் இணைந்து அப்பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.சந்த்காம் என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இந்நிலையில் குறித்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி வருவதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.