30 வருடங்களுக்கு பின்னர் திருகோணமலை துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி


திருகோணமலை துறைமுகம் 30 வருடங்களுக்கு பின்னர் தனது முதலாவது ஏற்றுமதியை மேற்கொண்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை அறிவித்துள்ளது.

இந்த முதல் ஏற்றுமதி கப்பலில் புல்மோட்டை கனிய மணல் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான கனிய மணல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த கனிய மணலை சீனாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.