நாட்டில் ஆறு மாதங்களுக்குள் பொதுத் தேர்தலை நடத்தாவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தை தடுக்க முடியாது என மிகிந்தலை ரஜமஹா விகாரையின் தம்மரத்ன தேரர் எச்சரித்துள்ளார்.
அநுராதபுரம் நகருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் தினேஷ் குணவர்தன தேரரை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நீங்கள் நாட்டை நேசிப்பவராக இருந்தால், ஆறு மாதங்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என உறுதியளிக்கவும் எனவும் இந்த நிலைமை மாறவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என மத்திய வங்கி ஆளுநரும் ஏற்கனவே கூறினார் எனவும் தேரர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார அறிவை வைத்தே மத்திய வங்கி ஆளுநர் கூறுகின்றார். அப்படி நடந்தால் வரப்போகும் போராட்டத்தை நிறுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்த தேரர் அங்கு பிரதமருக்கு நீண்ட உபதேசத்தையும் செய்துள்ளார்.