யாழ் மக்களே அவதானம் - வெளியாகிய முக்கிய எச்சரிக்கை..!



யாழ்.நகர் பகுதியில் அண்மைக்காலமாக உந்துருளி திருட்டுக்கள் அதிகரித்துவருவதாக தெரிவித்த காவல்துறையினர் , திருட்டுக்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

அண்மைய நாட்களில் பல முறைப்பாடுகள் காவல்துறை நிலையங்களுக்கு கிடைக்க பெற்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.

வீடுகளுக்கு முன்பாக கடைகளுக்கு முன்பாக தமது உந்துருளிகளை நிறுத்தி விட்டு ஒரு சில நிமிடத்தில் திரும்பி வந்திடுவோம் எனும் நோக்கில் உந்துருளி திறப்புக்களை எடுக்காமல் சிலர் செல்கின்றனர்.

அதேபோல உந்துருளிகளை இயங்கு நிலையில் விட்டும் சிலர் செல்கின்ற சமயங்களை அவதானித்து உந்துருளிகள் திருடப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

அவ்வாறு திருடப்படும் உந்துருளிகள் அன்றைய தினம் மாலை அல்லது மறுநாள் ஆள்நடமாட்டம் அற்ற பகுதிகளில் கைவிடப்பட்ட நிலைகளில் காவல்துறையினரால் மீட்கப்படுகின்றன.

எனவே உந்துருளிகளை நிறுத்தி விட்டு செல்வோர் அதனை பூட்டி பாதுகாப்பாக நிறுத்தி செல்லுமாறு அறிவித்துள்ளனர்.

அத்துடன் திருடப்படும் உந்துருளிகளை கொண்டு ஏதேனும் குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனரா என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.