நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் அருண் விஜய். இவர் முறைமாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்.அதற்கு பிறகு இயற்கை, குற்றம் 23,பாண்டவர் பூமி போன்ற படங்களில் நடித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகமாகி வந்துக்கொண்டிருக்கின்றது. சில சினிமா பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர். இந்நிலையில் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் நான் கொரோனா பரிசோதனை செய்துக்கொண்டேன் சோதனை முடிவில் எனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமை படுத்தி கொண்டேன். அனைவரும்  பாதுகாப்பாக இருங்கள்  என்று கூறியுள்ளார்.