16 மாணவிகள் வன்புணர்வு - தேடப்பட்டு வந்த ஆசிரியர் கைது..!


16 மாணவிகளை வன்புணர்வு செய்ததாக கூறப்பட்ட நிலையில், தேடப்பட்டு வந்த ஆசிரியர் இன்றையதினம் களுத்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

30 வயதான கணித பாடம் கற்பிக்கும் குறித்த ஆசிரியர், திருமணமானவர் எனவும், அவருக்கு எதிராக மனைவியும் முறைப்பாடு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவிகளில் களுத்துறை பிரதேச காவல்துறை நிலைய அதிகாரி ஒருவரின் மகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிரியர் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் போது எடுத்த வீடியோ பதிவுகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கூறியுள்ளது.

இதேவேளை, இந்த ஆசிரியர் வேறு சில இடங்களில் பிரத்தியேக வகுப்புகளை நடத்தியுள்ளார் எனவும், அங்கும் மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளார்களா இல்லையா என மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கூறியுள்ளது.

அதேசமயம், இதுபோன்ற துன்பறுத்தல்கள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு 1929 என்ற தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்துமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.