வெளிநாட்டு கனவினால் உயிரை மாய்த்த இளைஞன் - சிறிலங்காவில் அதிர்ச்சி சம்பவம்

மாத்தறை, அக்குரஸ்ஸ பிரதேசத்தில் 29 வயதுடைய இளைஞன் ஒருவர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் உயிரை மாய்த்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டில் பொருத்தமான வேலை கிடைக்கவில்லை என பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு குறித்த இளைஞன் தூக்கில் தொங்கியதாக தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

கசுன் அஞ்சன ஜயசிங்க என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் சமீபகாலமாக எப்படியாவது வாழ்க்கையை வெற்றி பெற வேண்டும் என்று கொத்தனார் ஒருவரிடம் உதவிக்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில் கொரிய பரீட்சை எழுதியவர் 5 புள்ளிகளை இழந்ததால் மனமுடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மூன்று பிள்ளைகளில் மூத்த மகனான கசுன் அஞ்சனா குடும்ப பாரத்தை சுமந்து கொண்டு தனது விருப்பத்திற்கு ஏற்ப பெற்றோரை நடத்த முடியாமல் தவித்து வந்ததாக தாய் தெரிவித்துள்ளார்.

தங்களுடைய தங்கை பொருட்கள் விநியோகம் செய்யும் இடத்தில் தற்காலிக வேலையில் இருப்பதாகவும், தம்பி இந்த ஆண்டு சாதாரண தர எழுதப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.