ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு மூட்டை யூரியா உரம் இலவசம்!

எதிர்வரும் அறுவடை காலத்தில் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு மூட்டை (50 கிலோ) யூரியா உரம் இலவசமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.குறித்த பிரேரணைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

அகுனுகொலபொலஸவில் நேற்று சனிக்கிழமை (17) இடம்பெற்ற நிக்லாவில் கலந்துகொண்டு பேசும்போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.இரண்டரை ஏக்கருக்கும் குறைவான விவசாய நிலங்களைக் கொண்ட விவசாயிகளுக்கு உரம் ஒரு மூட்டை வழங்கப்படவுள்ளதாக கூறியுள்ளார்.