வெள்ளவத்தை சிறுவர் காப்பகத்திலிருந்து 15 வயது சிறுமி மாயம்!

வெள்ளவத்தை – டபிள்யு.ஏ.டி. சில்வா மாவத்தையிலுள்ள சிறுவர் காப்பகத்திலிருந்த சிறுமியொருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதுகுறித்து வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி நேற்று (செவ்வாய்கிழமை) அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், 3 நாள்களுக்கு முன்னரே ரன்முத்துகல சிறுவர் காப்பகத்திலிருந்து வெள்ளவத்தை சிறுவர்  காப்பகத்துக்கு அழைத்து வரப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.15 வயதான குறித்த சிறுமி, தியகடுவ, மஹகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவித்துள்ள வெள்ளவத்தை பொலிஸார் சிறுமியைத் தேடும் பணியை முன்னெடுத்துள்ளனர்.