
கண்டியின் பல பிரதேசங்களில் உணரப்பட்ட நில அதிர்வு தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக அப்பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல மேலும் கூறியுள்ளதாவது, “கண்டி நில அதிர்வு தொடர்பில் ஆராய்வதற்கு பேராதனை மற்றும் மொறட்டுவை பல்கலைக்கழகங்களின் கலாநிதிகள் மற்றும் பேராசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவில் மூவர் உள்ளடங்குகின்றனர்.
மேலும், கண்டியின் குண்டசாலை, பன்வில மற்றும் வத்தேகம உள்ளிட்ட சில பகுதிகளில் அண்மையில் மீண்டும் நில அதிர்வு பதிவானது. 4 மத்திய நிலையங்களில் அதிர்வுகள் பதிவாகின” என அவர் குறிப்பிட்டுள்ளார்.