
மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் அவரின் அயல் வீட்டில் மர்மான முறையில் உயிரிழந்த நிலையில், நேற்று இரவு 9 மணியளவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
கொக்கட்டிச்சோலை முனைக்காடு வடக்கைச் சேர்ந்த 35 வயதுடைய இரத்திணசிங்கம் உதயன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.